Saturday, April 26, 2014

தமிழ் வழி மந்திரங்கள்



துாப தீபம்

பெரும்புலர் காலை மூழ்கி பித்தர்க்குப் பத்தராகி

அரும்பொடு மலர் கொண்டு ஆர்வத்தை உள்ளே வைத்து

விரும்பிநல் துாபதீபம் விதியினால்இட வல்லார்க்குக்

கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே




கற்பனைக் கடந்த சோதி கருணையே உருவமாகி

அற்புதக் கோலம் நீடி அருமறைச் சிறத்தின்மேலாம்

சிற்பர வியோமமாகும் திருசிற்றம்பலத்துள் நின்று

பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி




ஒசை ஒலிஎலாம் ஆனாய் நீயே

   உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே

வாசமலரெலாம் ஆனாய் நீயே

   மலையான் மருகனாய் நின்றாய் நீயே

பேசப்பெரிதும் இனியாய் நீயே

   பிரானாய் அடி என்மேல் வைத்தாய் நீயே

தேச விளக்கெலாம் ஆனாய் நீயே

   திருவையாறு அகலாத செம்பொற் சோதீ.



மங்களம்

தனம்தரும், கல்வி தரும் ஓரு நாளும் தளர் வறியா

மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சமில்லா

இனம் தரும்! நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்கே

கனந்தரும் புங்குழாள் அபிராமி கடைக்கண்களே.








Friday, April 25, 2014

தமிழ் வழி மந்திரங்கள்



                   
                  திருவிளக்கு ஏற்றும் போது
              
               இல்லக விளக்கது இருள் கெடுப்பது
               சொல்லக விளக்கது சோதி யுள்ளது
               பல்லக விளக்கது பலருங் காண்பது
               நல்லக விளக்கது  நமச்சி வாயவே

                      
                        நீர் அளாவுதல்
              
              மூர்த்தி  யாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
              தீர்த்த மாகி யறிந்தறியாத் திறத்தி னாலுமுயிர்க்குநல
மார்த்தி நாளு மறியாமை யகற்றி யறிவிப் பாலெவனப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரண மடைகின்றோம்.   
     
      திரு நீறு வழங்கும் போது


மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயன் திருநீறே!


எலுமிச்சம் பழம் சுற்றும்போது

 

ஏது பிழை செய்தாலும் ஏழையே னுக்கிரங்கி

தீது புரியாத தெய்வமே -நீதி

தழைக்கின்ற போருர்த் தனிமுதலே! நாயேன்

பிழைக்கின்ற வாறுநீ பேசு.

 

 

               தேங்காய்ச் சுற்றும் போது

 

கல்லாப் பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி

நில்லாப் பிழையும் நினையாப்பிழையும். நின் ஐந்தெழத்தை

சொல்லாப்பிழையும், துதியாப்பிழையும், தொழாப்பிழையும்,

எல்லாப்பிழையும், பொருத்தருள்வாய் கச்சி ஏகம்பனே!.

 

          பூசணிக்காய் சுற்றும் போது

 

வாழ்க அந்தணர் வானவர் ஆனினும்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக!

ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே

சுழ்க வையகமும் துயர் தீர்கவே!  

 



             
                  

Wednesday, February 26, 2014

மூலிகை சாபநிவர்த்தி

மூலிகை சாபநிவர்த்தி மந்திரம்

பொதுவான மந்திரம் 


”ஆனைமுகனை அனுதினமும் மறவேன் அகத்தியர் சாபம் நசிநசி!

பதினெண்சித்தர் சாபம் நசிநசி! தேவர்கள் சாபம் நசிநசி!

மூவர்கள் சாபம் நசிநசி! மூலிகை சாபம் முழுதும் நசிநசி!.”

குறிப்பு : மேற்கூறிய மூலிகை சாபநிவர்த்தி மந்திரத்தை  ஞாயிற்றுக்கிழமை  பிரம்ம முகூர்த்த வேலையில் ஆதிமூலக்கொடிக்கு (கொடிஅருகு) கன்னி நுால்காப்பு கட்டி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து ஒரு இலட்சம் உரு ஏற்றவும். பிறகு நமக்கு தேவையான பட்சத்தில் மூன்று முறை கூறி சாபநிவர்த்தி செய்து நமக்கும் பிறர்க்கும் பயன்படுத்தலாம்.

மூலிகை பிராண பிரதிஷ்டை


”ஓம்மூலி மஹாமூலி ஜீவமூலி

உன் உயிர் உன் உடலில் நிற்க சிவா.”

குறிப்பு : இந்த மந்திரத்தை மூன்றுதரம் சொல்லி கொஞ்சம் விபூதியும் அருகம்புல்லும் மேலே போட்டு வணங்கி ஆணிவேர் அருபடாமல் விரல்நெகங்கள் படாமல் எடுத்து பயன்படுத்திக் கொள்ள மூலிகை உயிருடனிருந்து பலன் கொடுக்கும்.

சர்வ வசிய மூலிகை


  ஆதிவாரத்தில் ஆலம் புல்லுருவிக்கு சாப நிவர்த்தி செய்து பிராண பிரதிஷ்டை செய்து துாப தீபம் காட்டி மஞ்சள் நுால் காப்பு கட்டி மறு ஆதிவாரம் சூரிய உதயத்தில் பொங்கலிட்டு பால் பழம் நைவேத்தியம் வைத்து  துாப தீபங் காட்டி ”அம் அம் வசீகரம் ஜெயமாதா” என்று  இலட்சம் உரு கொடுத்து எடுத்துக்கொள்ளவும். இதனால் சர்வ வசியமும் சித்தியாகும்.











Tuesday, February 25, 2014

பூஜாவிதி

செய்முறை பூஜாவிதி

 
  சுத்தமாகிய தனிமையான ஓர் அறையில் பத்மாசனத்தில் வடகிழக்காக அமர்ந்து, அடி முடி நடுவாய் மனதை நிறுத்தி, செப்புத்தகட்டில் வரைந்த யந்திரதுக்கு சாபவிமோசனம் பிராணபிரதிஷ்டை செய்து, ராஐ கனியால் சுத்தி செய்து எண்ணை, சீக்காய், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தத்தால் அபிசேகம் செய்வித்து  நம்மால் முடிந்த நைவேத்தியம் படைத்து, யக்ஞம் வளர்த்தி யக்ஞபிரதிஷ்டை செய்வித்து உருத்தராட்ச மணியால் காலை பகல் மாலை நடுநிசியாக தொடர்ந்து குண்டலினி வல்லபை சக்தியை மூலாதாரத்தில் பாவனையால் சக்தியை எழுவித்து ஒருமண்டலம் பயிற்ச்சித்தால், இந்த மூலவிநாயகர் வசியத்தால் அஷ்டமா சித்தியும், அஷ்ட கர்மமும் கரதலா கமலம்போல் நடைபெறும். 

Saturday, February 22, 2014

கணபதி வசியம்



கணபதி வசியம்


ஸ்தோத்திரம்

பிரணம் யா சிரசா தேவம்

கௌரி புத்ரம் விநாயகம்

பக்தா வாஸம் ஸ்மரேன் நித்யம்

ஆயுர் காமர்த்த சித்தயே.



மூலமந்திரம்



ஓம் ஆதிமூலத்தி கிரியுங் கணபதியே நம

கெங் கங் கணபதி கிரியும் விரியும்

நான் நினைத்ததெல்லாம் என்வசமாக.


வசியமால்

ஓம் கணபதி ஓங்கார கணபதி

குருகுரு கணபதி குண்டலி கணபதி

வாவா கணபதி வல்லபை கணபதி

ஆதிக் கணபதி அநாதிக் கணபதி

சக்திக் கணபதி சமயக் கணபதி

சித்திக் கணபதி சிவசிவ கணபதி

தம்பன மோகன சத்ரு மாரணம்

வசிய உச்சாடனம் வாலைக் கணபதி

அஷ்டமா சித்தியை ஆடுங் கணபதி

ஜெயஜெய கணபதி சீக்கிரம் வாவா

உன்னை நினைக்கவே ஓடிவா கணபதி

சித்து களாடும் செல்வக் கணபதி

ஆம்ஆம் ஓம்ஆம் ஐயுங் கிலியும்

சௌவும் கணபதி தாண்டவமாடு

என் சொல்படியே எதிரினிலாடு

நீயே நானாய் நானே நீயாய்

நினைவிலும் வாக்கிலும் நிற்க சுவாஹா.