Wednesday, August 28, 2013

எண்ணத்தின் சக்தி





எண்ணத்தின்  சக்தி

 எண்ணத்தின்  சக்தியால் மனிதன் எண்ணிய  படியேயாகிறான்; அடைகிறான்; நடக்கிறான்; நடத்துகிறான் என்றால் முதலாவது எண்ணம் என்பது என்ன என்பதையும்  சக்தியென்பது என்ன என்பதையும் எண்ணியபடியே ஆகிறேன் ; அடைகிறேன்; பிறர்மாட்டு நடத்துகிறான் நடத்திகாட்டுகிறான் என்பது எப்படியென்பதையும் ஆராய்ந்து  அறிந்து தெளிவோமானால்  அப்போது நாம் எண்ணியபடியே பகீர்முகமாக நாமே நடத்தவும் ஆகும்.    அந்த எண்ணங்கள் மின்சார சக்தியைப்போல் நம்மிடம் பிரதிபலிக்குமானால், அப்போது அந்தசக்தியின் தத்துவலாபத்தை நாமடைவதுடன் பிறருக்கும்  நன்மை  பயக்கும்படி செய்யமுடியும் ஆனபடியால் எப்போதும் நமது இருதயத்தில்  கெட்ட  எண்ணங்களை அப்புறப்படுத்தி சுத்த இருதயமாகவும் செய்துக் கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.
   
   நமக்கு வேண்டிய சித்தும் சித்தியும் எண்ணத்துள்ளேயே அடங்கியிருக்கிறது அதன் இரகசியம் இன்னது என்று நாம் தெரிந்து கொள்வதில்லை அப்படி தெரிந்துகொள்வோமானால் அப்போது அந்த சித்தத்தை இருப்பிடமாக கொண்டேயெழும் எண்ணமானால் கடவுள் நமக்கு கொடுத்த ஒரு அரும்பெரும் கருவியாகும் அதன் முலமாகதான் நாம் நன்மையடையவும் பிறருக்கு நன்மை செய்யவும் முடியும் எண்ணம் கெட்டுவிட்டால்  அதற்கு தக்கவாறு சொல்லும் காரியமும் கெட்டுவிடும் முதலாவது  எண்ணும் எண்ணங்களையே அதிஜாக்கிறதா வென்று அறியவேண்டும்.

 கர்த்தாவானவன் தனக்கு வேண்டியதை முதலாவது சிந்திக்கிறான். இரண்டாவது எண்ணமாக்கி யெண்ணுகிறான். மூன்றாவது அதை வெளியே பிரயோகப்படுத்துகிறான் கெட்டஎண்ணம் இருக்கிறவனுக்கு ஒருபோதும் இஷ்டசக்தி அடைய முடியாது.
    
  நல்ல எண்ணம் உண்டாவதற்கு முதலாவது மனம் நல்ல மனமாகவேண்டும் மனம் நல்லமனமாவதற்கு மனம் சாந்த நிலையை அடைய வேண்டும் சாந்த நிலையை அடைந்த மனமே சர்வ காரியத்திற்கும் காரிய சக்தியாயிருக்கிறது.   சாந்த  நிலையை அடைந்த மனம் எதுவோ அதுவே தெய்வ நிலையை அடைந்த மனம் ஆகிறது. தெய்வ நிலையை அடைந்த மனம் எல்லாம் செய்யவல்ல சித்தாகிறது.
   
  மனம் எப்போதும் சுழன்றுக் கொண்டிருக்கும் தன்மையது அது சில வேலையில் சுறைக் காற்று போலவும் இயங்குகின்றது இங்ஙனம் காற்றைப்போலச் சுழன்று கொண்டிருக்கும் மனம் நினைவுகளின் வடிவாக அமைந்துள்ளது. மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் அந்தக்கரணங்கள் நான்கினுள்ளும் மனத்தை முதற்கண் நிருவியிறுப்பது கூர்ந்துவுணரத்தக்கது ஏனைய முன்றும் மனத்தின் வெவ்வெறு நிலைகளாகவே நினைக்கப்படுகின்றன. மனத்தின் தொழில் நினைத்தல் என்க அதனாலே அது நினைவின் வடிவமானது என்று கூறுகிறோம். உபநிஷதங்களும் மனம் சிந்தித்தலையே உருவகமாக உடையது என்கிறது. சிந்தித்தலையுடைய மனதிற்குச் சிந்தை என்பது ஒரு பெயர். மனம் நினைவே வடிவமாக இருப்பினும் நினைவுகள் தாம் ஒவ்வொருவருக்கும் பலப்பல உளவே அது போலப் பல அல்ல ; எல்லா நினைவுகளும் எழுதற்கறிய நிலையானது ஒரு வல்லமை சக்தியாகும். அவ்வல்லமை நினைவுகளாலேயே  உரம்பெறத்தக்கது.

    நினைவுகள் முற்றும் அடங்கிவிடுங் காலத்து மனமும் அடங்கியதாகும் அதுவே மனம் இறந்த நிலை அமைதிநிலை சாந்தி நிலை என சித்தர்கள் கூறுகின்றனர். இதுவரையிலும் மனமென்ப தின்னதென்பதையும்  மனதின் சக்தி இத்தகைய தென்பதையும் எண்ணம் என்பது இன்னதென்பதையும் எண்ணத்தின் சக்தி இத்தகைய தென்பதையும் அறிந்து கொண்ட நாம் அந்த மனதை அடக்கியாளும் மார்கத்தையும் சக்தி பூர்வமாக்கும் மார்கத்தையும் பிரயோகப்படுத்தும் மார்கத்தையும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.  










  


 


 

Tuesday, August 27, 2013

மனோசக்தி



மனமும் மனோசக்தியும்
   

  நாம் முதலாவது மனம் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதன் உண்மையைத் தேரிந்துக் கொண்டால் பிறகு அதனுடைய சக்திகள் என்பதெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல சுலபமாகத் தெரிந்துக் கொள்ளலாம். உலக வாழ்க்கையில் மனம் என்றால் பல அநேகருக்குத் தெரியவே தெரியாது. என்றாலும் அவர்கள் எல்லாம் என்மனதிலேயிருக்குது என்பார்கள் அவ்வாறு சொல்வதெல்லாம் இயற்கை வழக்கச் சொல்லேயாகும்.


 


  மனம் என்பது ஒரு சிலருக்கே தெரியும் அவர்களைத்தான் அறிவுடையோர் என்றும் கற்றவர்கள் என்றும் சித்தர்கள் என்றும் ரிஷிகள் யோகிகள் தபசிகள் ஞானிகள் என்றும் சொல்கிறோம். மனம் என்னும் வஸ்துவை பகீர்முக உருவமாக காணமுடியாது. அந்தர்முக சுட்சம சக்தியால்தான் அறியமுடியும் அறியலாம் காணலாம். அசைவற்ற ஆத்மாவின் அசையும் சக்தி எதுவோ அதுவே மனம் என்று சொல்லப்படும். அதன் விருத்தி பலவாகி மனம் என்றும் உடலேன்றும் முச்சென்றும் நினைவென்றும் தொழில்முறை இயக்கத்தால் கூறப்படும்.  


  


  மனதுக்கு அந்தர்யாமி ஆத்மா ஆத்மாவுக்கு அந்தர்யாமி மனம் இந்த இரண்டிற்கும் தொடர்பு நடுநிலை யெதுவோ அதுவே அறிவாகும். மனம் அறியும் சக்தியை அடையும்போது அதை அறிவென்று சொல்லப்படும். முறையே ஆத்மாவின் விருத்தி உணர்வு, உணர்வின் விருத்தி அறிவு, அறிவின் விருத்தி மனம், மனத்தின் விருத்தி செயல் எனப்படும். மனத்தின் உருவத்தையும் அதன் வர்ணத்தையும் பிரதிபலிக்கும்படி நிருபித்து காட்ட முடியாது. ஆனால் சாஷி ருபமாகத்தான் நிருபிக்கமுடியும். அது உருவமற்றது, நிறமற்றது, தோற்றமற்றது, ஆதியும் அநாதியுமானது நினைவு எதுவோ அதுவே மனம், சிந்தனை எதுவோ அதுவே மனம், எண்ணம் எதுவோ அதுவே மனம் என்பது சித்தாந்த உண்மை.


   
  மனதுக்கு அடிப்படை ஆசார இருப்பிடம் பொதுவாக சரீரமேயாகும். சரீரத்தில் எங்கும் வியாபித்துள்ளது உயிர்பின் சக்தியாகிய மனம் செவியில் ஓசையாகவும் கண்ணில் தோற்றமாகவும் நாசியில் வாசனையாகவும் நாவில் சுவையாகவும் உடலில் பரிசமாகவும் பிரதிபலிக்கின்றது. மனமும் புத்தியும் இந்திரியங்களும் அகங்காரங்களும் அந்தக்கரணமும் உட்கருவி யெனப்படும். இவைகள் யாவும் ஒன்று கூடியதே சித்தமெனப்படும். இந்த சித்தத்துக்கு அதிகாரி மனம். மனதுக்கு அதிகாரி அறிவும் ஆன்மாவும் இதையே தாயுமானவர் சித்த மறியாதபடி சித்தத்தில் நின்றிலங்கும் திவ்ய தேஜோமயம் என்றார். இந்த சித்தத்தில் எழும் விருத்திகளே எண்ணங்கள் எனப்படும் மனம் எண்னுவதிலே எண்ணமென்றும் சிந்திப்பதினாலே சிந்தையென்றும் பெயர் பெறும்.   

 


   எண்ணம் என்பது பொருந்தும் ஆற்றல் பிரிக்கும் ஆற்றல்போன்ற ஒருவகை சக்தியாகும் அதையே மனேசக்தியென்றும் சொல்லப்படும். இயற்கையிலுள்ள சக்திகளஞ்சியத்திலிருந்து சித்தமெனும் கருவியானது சிலவற்றையெடுத்து தொழிற்படுத்தி எண்ணங்களாக வெளியே செலுத்துகின்றது. எண்ணங்கள் வெளியே சென்று மகா பஞ்சபூத சக்தியில் கலந்து உறவாடி செயல்களாகமாறி தொழில் புரிகின்றன. அதுகள் எண்ணத்துக்கு தக்கவாறு நன்மையாகவும் தீமையாகவும் செயல்புரிவது அதன் இயற்கையாகும். முதலாவது மனம் என்றால் என்ன என்பதையும் இரண்டாவது மனோவிருத்தி யென்னும் சத்தியென்றால் என்ன வென்பதையும் முன்றாவது எண்ணம் என்பது என்ன என்பதையும் நான்காவது மனோவசிய சக்திக்கு அடிப்படையாகிய மகா அமைதியென்பது எத்தகையது என்பதையும் அறிய வேண்டியது முதற் கடமையாகும். மனத்தின் சக்தியையும் எண்ணத்தின் சக்தியையும் அறியாது அடையாது செயல் நடத்துவது அநேகமாகத் துன்பத்துகே  ஆளாவான் என்பது சித்தாந்த உண்மை.