Thursday, January 29, 2015

மாந்திரீக பயிற்சி




மாந்திரீக பயிற்சி

   
  மாந்திரிகம் என்றால் மனதிடம் மனிதர்கள் ஒவ்வொருவரிடமும் அதீதமான (மனோ சக்தி) சக்தி மறைந்து கிடக்கிறது அந்த சக்தியை வளர்த்து திடமாக்கிக் கொண்டால் அதன் மூலம் திடமற்றவர்களின் பாதிப்பையும் திடம் பெற்றோரால் ஏற்படுத்தப்படும் பாதிப்பையும் நமது திடசக்தியால் தீர்த்துவிடமுடியும். இதுவே மந்திரம் ஆகும். இக்கலையை பயில மனதிடம் தான் முக்கியம். மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்பார்கள்.

    நமது நிலையத்தில் அஞ்சல் வழி மாந்திரிக பயிற்சியளிக்கப்படுகிறது. மாதம் ஒரு பயிற்சியாக 6 மாதம் பயிற்சியளிக்கப்படுகிறதுநமது பயிற்சியில் முதல் பாடத்தில் எண்ணத்தின் சக்தி, சுவாசத்தை அடக்கியாளும் அப்பியாசம், சுவாசக்கலை மாற்றுதல் அப்பியாசம், மணி மந்திர ஓளஷதா விளக்கம், எந்திரம் எழுதும் முறை உடல் கட்டு திசை கட்டு முறை, யந்திர சாப நிவர்த்தி, அஷ்டமா சித்திபெற மூலவிநாயகர் வசியம், செய்முறை பூஜாவிதி, வசியமை தயாரிக்கும் முறை, பில்லி, சூனிய, ஏவல், காற்று, பிரம்ம ராட்சதம், பேய், பிசாசு இவைகள் பற்றிய சில விளக்கங்கள், மூலிகை சாபநிவர்த்தி, மூலிகை பிராண பிரதிஷ்டை மந்திரம், வசிய வளையம் செய்முறை வெள்ளெருக்கு வசிய தாயத்து இன்னும் அனேக விசயங்கள் முதல் பாடத்தில் பயிற்றுவிக்கப்படும். அடுத்து வரும் பாடங்களில் பகவதி, காளி, வராகி, கர்னயட்சனி, பைரவர், மாடன், சிவபஞ்சாச்சரமாரல் சிவ சுப்ரமன்ய சடாச்சரமாறல், பில்லி, சூனிய ஏவல் விளக்கும் முறை வசியமை, விபூதி, வசிய எண்ணெய், புகை போடுதல், ஹோமம் வளர்த்தல் இன்னும் அநேக சூட்சம முறைகள் அவ்வப்போது பாடத்தில் பயிற்றுவிக்கப்படும்.
                                                        

    இந்த மாந்திரிக பயிற்சியை பயில்வதின் மூலம் நமது மனோசக்தி அதிகரித்து உடலும் உள்ளமும் தூய்மைபெறும். நமக்கு ஏற்படும் இன்னல்களை எளிதில் தீர்த்துக் கொள்ளவும் பிறருடைய துன்பங்களை தீர்ப்பதற்கும் நாம் உறுதுணையாக இருக்கவும் முடியும். இறைவன் மீது நம்பிக்கை வைத்து விடாமுயற்ச்சி செய்தால் நாம் எதிர்பார்க்கும் பலன் கண்டிப்பாக கிடைக்கும். அவநம்பிக்கையுடன் மனஉறுதியின்றி முயற்சித்தால் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இஷ்ட சித்தி அடையமுடியாது. இந்த 6 மாத பயிற்சியில் உள்ள பாடங்களை நன்கு படித்து புரிந்து கொண்டு பயிற்சித்தால் வேண்டிய பலனை அடையலாம். மேலும் விவரங்கள் அறிய தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும். நேரில் வரவிரும்புவோர் முன் அனுமதி பெற்று வரவும்.

தொடர்புக்கு

Cell No : 72007 51980

N.PALANI
A/C.NO.343801000000721
IFSC:IOBA0003438
I.O.B. BANK , PERAMBAKKAM 
TAMILNADU - INDIA


Tuesday, January 27, 2015

பைரவர் வழிபாடு





ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு


   இவர் அமர்ந்த நிலையில் தன் மடியில் அஜாமிளா (பைரவியை) அமர்த்திக் கொண்டு ஒரு கரத்தில் அமுத கலசமும், ஒரு கரத்தில் சூலமும் கொண்டு வைர கிரீடமும் பட்டு வஸ்திரமும் அணிந்து தம்பதி சமேதராக காட்சி தருகின்றார். இவரை அஷ்டமி திதி மற்றும் பவுர்ணமி நாளில், வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் வணங்கினால் சகல சம்பத்தும், பொன் பொருளும் கிட்டும். ஸ்ரீபைரவருக்குப் பவுர்ணமிக்குப் பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள்கிட்டும். இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் இவற்றினை தனித்தனி  தீபமாக  அகல் விளக்கில் ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

      வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை  வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள் செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது. தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும்.
   
      ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்ராபிஷேகம் செய்து, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம்கூடும்.இவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம். நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் யந்திரத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச்செழிப்புஏற்படும்.

   வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது யந்திரம்,படம் வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள். தினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும். வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி  அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும். ஸ்வர்ணகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தரும். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.  பவுர்ணமி அன்று  இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக்கொண்டு பதினெட்டு முறை பாராயணம் செய்யவேண்டும்.

   இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள  வறுமையிலிருந்து விடுபடலாம். ஒன்பதாவது பவுர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம். கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். கோரிக்கைகளை  நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.

   சித்திரை - பரணி, ஐப்பசி - பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம்கால பைரவருக்கு விசேஷ நாள்கள் ஆகும். ஏனெனில் பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நடசத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமாகும். பலனும் அதிகம் கிடைக்கும்.
தை மாதம் செவ்வாய்க் கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும். பைரவர் விரதம் எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் எதுவுமில்லை.
  குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். அதிகாலையில்  நீராடி பைரவரை மனதில் நினைத்து வணங்கவேண்டும். பகலில் இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்

சிதம்பரத்தில் சொர்ண பைரவர்

   சிதம்பரம் நடராஜப் பெருமானுடைய சித்திர சபையில் கீழ்புறத்தில் வைக்கப்பட்டுள்ள சொர்ண பைரவ முர்த்தியின் பாதத்தில் சுமார் இருநுரு,முன்னுறு வருடங்களுக்கு முன் அப்போது வாழ்ந்த தில்லைவாழ் அந்தணர்கள் ஓர் செப்புத்தகட்டை அர்த்தஜாமப் பூஜையின் போது மந்திரங்கள் கூறி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்று விடுவார்களாம் மறுநாள் காலையில் வந்து பார்க்க பைரவப் பெருமானின் பேரருளால் அந்தச் செப்புத் தகடு சொர்ணத் தகடாக மாறி இருக்குமாம் பின் அதை விற்று வாழ்க்கையை இனிமையாக கழித்ததாகக் கூறப்படுகிறது. இக்காலத்திலும் இவரை அன்புடன் உள்ளம் உருகி வணங்கி வழிபட்டு வர சகல சௌபாக்யங்களும் கிட்டும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் தியான சுலோகம்

காங்கேய பாத்ரம் டமருகம்
திரிசுலம் வரம் கரை
ஸமசந்ததம் த்ரிநேத்ரம்
தேவயாயுதம் தப்தஸவர்ண
வர்ஷணம் ஸ்வர்ணா
கர்ஷணம் பைரவம்


ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் துதி

“ஸ்வர்ண கால பைரவம் த்ரிசுலயுக்த பாணி நம்
வேத ருப ஸாரமேல் ஸம்யுதம் மஹேச்வரம்
ஸ்மாச்ரி தேஷ ஸர்வதா ஸமஸ்தவஸ்து தாயினம்
மகீந்திரி வம்ச பூர்வ புண்ய ருபினம் ஸமாச்ரயே”
   
  மேற்கன்ட ஸ்வர்ணாகர்சண மந்திரத்தினை தில்லை வாழ் அந்தணர்கள் அறுபத்து நான்காயிரம் தடவைகள் பைரவர் முன் கூறி வைத்துவிட்டு செல்லும் செப்புத் தகடே பொன் தகடாக மாறி அவர்களுக்கு வளமையை அள்ளித் தந்ததாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மூல மந்திரம்


”ஏக சஷ்டி அஷரம் மந்திரம் லகு சித்தப்ரதாயகம்

ஏக சஷ்டி சதம் குர்யாத் ஜபம் மந்த்ரஷ்ய சித்தியே.”

(வேறு மூல மந்திரம்)

ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத்தோறணாய
அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷணபைரவாய
மமதாரித்திரிய வித்வேஷணாய
ஓம்ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ




    ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் யந்திரம்