துாப தீபம்
பெரும்புலர் காலை மூழ்கி பித்தர்க்குப் பத்தராகி
அரும்பொடு மலர் கொண்டு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பிநல் துாபதீபம் விதியினால்இட
வல்லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே
கற்பனைக் கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோலம் நீடி அருமறைச் சிறத்தின்மேலாம்
சிற்பர வியோமமாகும் திருசிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி
போற்றி
ஒசை ஒலிஎலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாசமலரெலாம் ஆனாய் நீயே
மலையான்
மருகனாய் நின்றாய் நீயே
பேசப்பெரிதும் இனியாய் நீயே
பிரானாய்
அடி என்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
திருவையாறு
அகலாத செம்பொற் சோதீ.
மங்களம்
தனம்தரும், கல்வி தரும் ஓரு நாளும் தளர் வறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும்! நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்கே
கனந்தரும் புங்குழாள் அபிராமி கடைக்கண்களே.