Wednesday, February 26, 2014

மூலிகை சாபநிவர்த்தி

மூலிகை சாபநிவர்த்தி மந்திரம்

பொதுவான மந்திரம் 


”ஆனைமுகனை அனுதினமும் மறவேன் அகத்தியர் சாபம் நசிநசி!

பதினெண்சித்தர் சாபம் நசிநசி! தேவர்கள் சாபம் நசிநசி!

மூவர்கள் சாபம் நசிநசி! மூலிகை சாபம் முழுதும் நசிநசி!.”

குறிப்பு : மேற்கூறிய மூலிகை சாபநிவர்த்தி மந்திரத்தை  ஞாயிற்றுக்கிழமை  பிரம்ம முகூர்த்த வேலையில் ஆதிமூலக்கொடிக்கு (கொடிஅருகு) கன்னி நுால்காப்பு கட்டி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து ஒரு இலட்சம் உரு ஏற்றவும். பிறகு நமக்கு தேவையான பட்சத்தில் மூன்று முறை கூறி சாபநிவர்த்தி செய்து நமக்கும் பிறர்க்கும் பயன்படுத்தலாம்.

மூலிகை பிராண பிரதிஷ்டை


”ஓம்மூலி மஹாமூலி ஜீவமூலி

உன் உயிர் உன் உடலில் நிற்க சிவா.”

குறிப்பு : இந்த மந்திரத்தை மூன்றுதரம் சொல்லி கொஞ்சம் விபூதியும் அருகம்புல்லும் மேலே போட்டு வணங்கி ஆணிவேர் அருபடாமல் விரல்நெகங்கள் படாமல் எடுத்து பயன்படுத்திக் கொள்ள மூலிகை உயிருடனிருந்து பலன் கொடுக்கும்.

சர்வ வசிய மூலிகை


  ஆதிவாரத்தில் ஆலம் புல்லுருவிக்கு சாப நிவர்த்தி செய்து பிராண பிரதிஷ்டை செய்து துாப தீபம் காட்டி மஞ்சள் நுால் காப்பு கட்டி மறு ஆதிவாரம் சூரிய உதயத்தில் பொங்கலிட்டு பால் பழம் நைவேத்தியம் வைத்து  துாப தீபங் காட்டி ”அம் அம் வசீகரம் ஜெயமாதா” என்று  இலட்சம் உரு கொடுத்து எடுத்துக்கொள்ளவும். இதனால் சர்வ வசியமும் சித்தியாகும்.











No comments: