Wednesday, August 28, 2013

எண்ணத்தின் சக்தி





எண்ணத்தின்  சக்தி

 எண்ணத்தின்  சக்தியால் மனிதன் எண்ணிய  படியேயாகிறான்; அடைகிறான்; நடக்கிறான்; நடத்துகிறான் என்றால் முதலாவது எண்ணம் என்பது என்ன என்பதையும்  சக்தியென்பது என்ன என்பதையும் எண்ணியபடியே ஆகிறேன் ; அடைகிறேன்; பிறர்மாட்டு நடத்துகிறான் நடத்திகாட்டுகிறான் என்பது எப்படியென்பதையும் ஆராய்ந்து  அறிந்து தெளிவோமானால்  அப்போது நாம் எண்ணியபடியே பகீர்முகமாக நாமே நடத்தவும் ஆகும்.    அந்த எண்ணங்கள் மின்சார சக்தியைப்போல் நம்மிடம் பிரதிபலிக்குமானால், அப்போது அந்தசக்தியின் தத்துவலாபத்தை நாமடைவதுடன் பிறருக்கும்  நன்மை  பயக்கும்படி செய்யமுடியும் ஆனபடியால் எப்போதும் நமது இருதயத்தில்  கெட்ட  எண்ணங்களை அப்புறப்படுத்தி சுத்த இருதயமாகவும் செய்துக் கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.
   
   நமக்கு வேண்டிய சித்தும் சித்தியும் எண்ணத்துள்ளேயே அடங்கியிருக்கிறது அதன் இரகசியம் இன்னது என்று நாம் தெரிந்து கொள்வதில்லை அப்படி தெரிந்துகொள்வோமானால் அப்போது அந்த சித்தத்தை இருப்பிடமாக கொண்டேயெழும் எண்ணமானால் கடவுள் நமக்கு கொடுத்த ஒரு அரும்பெரும் கருவியாகும் அதன் முலமாகதான் நாம் நன்மையடையவும் பிறருக்கு நன்மை செய்யவும் முடியும் எண்ணம் கெட்டுவிட்டால்  அதற்கு தக்கவாறு சொல்லும் காரியமும் கெட்டுவிடும் முதலாவது  எண்ணும் எண்ணங்களையே அதிஜாக்கிறதா வென்று அறியவேண்டும்.

 கர்த்தாவானவன் தனக்கு வேண்டியதை முதலாவது சிந்திக்கிறான். இரண்டாவது எண்ணமாக்கி யெண்ணுகிறான். மூன்றாவது அதை வெளியே பிரயோகப்படுத்துகிறான் கெட்டஎண்ணம் இருக்கிறவனுக்கு ஒருபோதும் இஷ்டசக்தி அடைய முடியாது.
    
  நல்ல எண்ணம் உண்டாவதற்கு முதலாவது மனம் நல்ல மனமாகவேண்டும் மனம் நல்லமனமாவதற்கு மனம் சாந்த நிலையை அடைய வேண்டும் சாந்த நிலையை அடைந்த மனமே சர்வ காரியத்திற்கும் காரிய சக்தியாயிருக்கிறது.   சாந்த  நிலையை அடைந்த மனம் எதுவோ அதுவே தெய்வ நிலையை அடைந்த மனம் ஆகிறது. தெய்வ நிலையை அடைந்த மனம் எல்லாம் செய்யவல்ல சித்தாகிறது.
   
  மனம் எப்போதும் சுழன்றுக் கொண்டிருக்கும் தன்மையது அது சில வேலையில் சுறைக் காற்று போலவும் இயங்குகின்றது இங்ஙனம் காற்றைப்போலச் சுழன்று கொண்டிருக்கும் மனம் நினைவுகளின் வடிவாக அமைந்துள்ளது. மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் அந்தக்கரணங்கள் நான்கினுள்ளும் மனத்தை முதற்கண் நிருவியிறுப்பது கூர்ந்துவுணரத்தக்கது ஏனைய முன்றும் மனத்தின் வெவ்வெறு நிலைகளாகவே நினைக்கப்படுகின்றன. மனத்தின் தொழில் நினைத்தல் என்க அதனாலே அது நினைவின் வடிவமானது என்று கூறுகிறோம். உபநிஷதங்களும் மனம் சிந்தித்தலையே உருவகமாக உடையது என்கிறது. சிந்தித்தலையுடைய மனதிற்குச் சிந்தை என்பது ஒரு பெயர். மனம் நினைவே வடிவமாக இருப்பினும் நினைவுகள் தாம் ஒவ்வொருவருக்கும் பலப்பல உளவே அது போலப் பல அல்ல ; எல்லா நினைவுகளும் எழுதற்கறிய நிலையானது ஒரு வல்லமை சக்தியாகும். அவ்வல்லமை நினைவுகளாலேயே  உரம்பெறத்தக்கது.

    நினைவுகள் முற்றும் அடங்கிவிடுங் காலத்து மனமும் அடங்கியதாகும் அதுவே மனம் இறந்த நிலை அமைதிநிலை சாந்தி நிலை என சித்தர்கள் கூறுகின்றனர். இதுவரையிலும் மனமென்ப தின்னதென்பதையும்  மனதின் சக்தி இத்தகைய தென்பதையும் எண்ணம் என்பது இன்னதென்பதையும் எண்ணத்தின் சக்தி இத்தகைய தென்பதையும் அறிந்து கொண்ட நாம் அந்த மனதை அடக்கியாளும் மார்கத்தையும் சக்தி பூர்வமாக்கும் மார்கத்தையும் பிரயோகப்படுத்தும் மார்கத்தையும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.  










  


 


 

Tuesday, August 27, 2013

மனோசக்தி



மனமும் மனோசக்தியும்
   

  நாம் முதலாவது மனம் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதன் உண்மையைத் தேரிந்துக் கொண்டால் பிறகு அதனுடைய சக்திகள் என்பதெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல சுலபமாகத் தெரிந்துக் கொள்ளலாம். உலக வாழ்க்கையில் மனம் என்றால் பல அநேகருக்குத் தெரியவே தெரியாது. என்றாலும் அவர்கள் எல்லாம் என்மனதிலேயிருக்குது என்பார்கள் அவ்வாறு சொல்வதெல்லாம் இயற்கை வழக்கச் சொல்லேயாகும்.


 


  மனம் என்பது ஒரு சிலருக்கே தெரியும் அவர்களைத்தான் அறிவுடையோர் என்றும் கற்றவர்கள் என்றும் சித்தர்கள் என்றும் ரிஷிகள் யோகிகள் தபசிகள் ஞானிகள் என்றும் சொல்கிறோம். மனம் என்னும் வஸ்துவை பகீர்முக உருவமாக காணமுடியாது. அந்தர்முக சுட்சம சக்தியால்தான் அறியமுடியும் அறியலாம் காணலாம். அசைவற்ற ஆத்மாவின் அசையும் சக்தி எதுவோ அதுவே மனம் என்று சொல்லப்படும். அதன் விருத்தி பலவாகி மனம் என்றும் உடலேன்றும் முச்சென்றும் நினைவென்றும் தொழில்முறை இயக்கத்தால் கூறப்படும்.  


  


  மனதுக்கு அந்தர்யாமி ஆத்மா ஆத்மாவுக்கு அந்தர்யாமி மனம் இந்த இரண்டிற்கும் தொடர்பு நடுநிலை யெதுவோ அதுவே அறிவாகும். மனம் அறியும் சக்தியை அடையும்போது அதை அறிவென்று சொல்லப்படும். முறையே ஆத்மாவின் விருத்தி உணர்வு, உணர்வின் விருத்தி அறிவு, அறிவின் விருத்தி மனம், மனத்தின் விருத்தி செயல் எனப்படும். மனத்தின் உருவத்தையும் அதன் வர்ணத்தையும் பிரதிபலிக்கும்படி நிருபித்து காட்ட முடியாது. ஆனால் சாஷி ருபமாகத்தான் நிருபிக்கமுடியும். அது உருவமற்றது, நிறமற்றது, தோற்றமற்றது, ஆதியும் அநாதியுமானது நினைவு எதுவோ அதுவே மனம், சிந்தனை எதுவோ அதுவே மனம், எண்ணம் எதுவோ அதுவே மனம் என்பது சித்தாந்த உண்மை.


   
  மனதுக்கு அடிப்படை ஆசார இருப்பிடம் பொதுவாக சரீரமேயாகும். சரீரத்தில் எங்கும் வியாபித்துள்ளது உயிர்பின் சக்தியாகிய மனம் செவியில் ஓசையாகவும் கண்ணில் தோற்றமாகவும் நாசியில் வாசனையாகவும் நாவில் சுவையாகவும் உடலில் பரிசமாகவும் பிரதிபலிக்கின்றது. மனமும் புத்தியும் இந்திரியங்களும் அகங்காரங்களும் அந்தக்கரணமும் உட்கருவி யெனப்படும். இவைகள் யாவும் ஒன்று கூடியதே சித்தமெனப்படும். இந்த சித்தத்துக்கு அதிகாரி மனம். மனதுக்கு அதிகாரி அறிவும் ஆன்மாவும் இதையே தாயுமானவர் சித்த மறியாதபடி சித்தத்தில் நின்றிலங்கும் திவ்ய தேஜோமயம் என்றார். இந்த சித்தத்தில் எழும் விருத்திகளே எண்ணங்கள் எனப்படும் மனம் எண்னுவதிலே எண்ணமென்றும் சிந்திப்பதினாலே சிந்தையென்றும் பெயர் பெறும்.   

 


   எண்ணம் என்பது பொருந்தும் ஆற்றல் பிரிக்கும் ஆற்றல்போன்ற ஒருவகை சக்தியாகும் அதையே மனேசக்தியென்றும் சொல்லப்படும். இயற்கையிலுள்ள சக்திகளஞ்சியத்திலிருந்து சித்தமெனும் கருவியானது சிலவற்றையெடுத்து தொழிற்படுத்தி எண்ணங்களாக வெளியே செலுத்துகின்றது. எண்ணங்கள் வெளியே சென்று மகா பஞ்சபூத சக்தியில் கலந்து உறவாடி செயல்களாகமாறி தொழில் புரிகின்றன. அதுகள் எண்ணத்துக்கு தக்கவாறு நன்மையாகவும் தீமையாகவும் செயல்புரிவது அதன் இயற்கையாகும். முதலாவது மனம் என்றால் என்ன என்பதையும் இரண்டாவது மனோவிருத்தி யென்னும் சத்தியென்றால் என்ன வென்பதையும் முன்றாவது எண்ணம் என்பது என்ன என்பதையும் நான்காவது மனோவசிய சக்திக்கு அடிப்படையாகிய மகா அமைதியென்பது எத்தகையது என்பதையும் அறிய வேண்டியது முதற் கடமையாகும். மனத்தின் சக்தியையும் எண்ணத்தின் சக்தியையும் அறியாது அடையாது செயல் நடத்துவது அநேகமாகத் துன்பத்துகே  ஆளாவான் என்பது சித்தாந்த உண்மை.


Friday, August 9, 2013

குரு வணக்கம்



                                   குரு வணக்கம்

இயம்புவதும்  ஆதார  இறைவானீயே

இதுவொன்றே  வழிகாட்டும் குருவும்நீயே

நயம்படவே லயப்படுத்தும் நாதன்நீயே

நான்முகனும் திருமாலும் சிவனும்நீயே

வயநமசி வாயகுரு வாலைநீயே

வாயில்வரும் மந்திரங்க ளெல்லாம்நீயே

கயமுகனும் அறுமுகனும் காட்சிநீயே

கண்கண்ட தெய்வம்நீ யுண்மைநீயே

உண்மையென்ற பொருளறியா வுலகமாந்தர்

உண்மயமுந் தன்மயமும் உணரமாட்டார்

மண்மயமே யாவதல்லால் கதிவேறுண்டோ

மண்மயத்தை விண்மயத்தில் வைக்கவேண்டும்,

விண்மயமுங் கண்மயமும் ஒன்றேயானால்

வேதாந்த வெட்டவெளி நீரேயாகும்

கண்மயமே பொன்மயமே கண்ணேவாவா

கருத்தில்வளர் குருவேசற் குருவேவாவா.

Saturday, August 3, 2013

வசியமுறை


வசியமுறை
  

   வசியம் பல்வேறு இடங்களில் உண்மையில் செய்வினை வசியம் என்ற பெயரில் ஏற்படுத்தப்படும் அனைத்து பாதிப்புகளுமே மூலிகைகள் மற்றும் ஆழ்மன சக்தியைக் கொண்டு ஏற்படுத்தப்படும் மன உடல் பாதிப்புகளே என்பதற்கு மிக வலுவான சான்றுகள் உள்ளன. ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒருவரின் மனதை தன் உத்திரவுக்கு கட்டுபடுத்தி செயல்படுத்தும் ஹிப்னாடிஸத்தை நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆழ்மன சக்தியை ஒருங்கினைத்து மன மொழி உத்தரவுகளை செலுத்தி தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கமுடியும் என்று ரெய்கி மருத்துவம் நிரூபித்திருக்கிறது. ஆழ்மன சக்த்தியை ஒருங்கினைத்து தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு செய்திகளை அனுப்பும் டெலிபதி முறையை நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
 
  விஷ தன்மை வாய்ந்த மூலிகைகளை பயன்படுத்தி மன பாதிப்புகளையும் உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தமுடியும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. எங்கோ இருக்கும் ஒருவரை ரெய்கி மூலமாக குணப்படுத்தமுடியும் என்றால், எங்கோ இருக்கும் ஒருவரிடம் டெலிபதி மூலம் பேச முடியும் என்றால் எங்கோ இருக்கும் ஒருவருக்கு வித்வ பிரயோகம் மூலம் ஏன் பாதிப்புகளை ஏற்படுத்தமுடியாது என்பது வித்வ பிரயோக வல்லுனர்களின் கேள்வி எது எப்படியிருந்தாலும் ஆன்மீக வழியான வித்வ பிரயோகத்திலும் மூலிகைகளின் சக்தியே அடிப்படையாகவும் முக்கியமானதாகவும் பயன் படுத்தப்படுகிறது.



  காதல் வெற்றிக்கு..... காதல் வசப்படுபவர்களில் நிறைய பேர் தங்களின் காதல் வெற்றி பெற வசியம் செய்பவர்களை தேடி செல்வதை அதிகம் பார்க்க முடிகிறது. வசியம் என்பது ஏதோ மிகப்பெரிய சக்தி வாய்ந்தது போலவும் யாரை வேண்டுமென்றாலும் வசியம் செய்து விடலாம் என்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது. உண்மையில் வசியம் செய்வதற்க்கு சில விதி முறைகளை ஸ்ரீ தேவி யட்சினி மகாத்மியம் சொல்கிறது அதன்படி...... திருமணமாகி கணவனுடன் இருக்கும் பெண்ணை வசியம் செய்ய கூடாது வேறு ஒரு ஆணுடன் காதல் வயப்பட்டபெண்ணை வசியம் செய்யகூடாது உறவு முறையற்ற பெண்ணை வசியம் செய்ய கூடாது தன்னை விட மூத்த வயதுடைய பெண்ணை வசியம் செய்ய கூடாது அடைக்கலம் தேடிவந்த பெண்ணை வசியம் செய்ய கூடாது அறிமுகம் இல்லாத பெண்னை வசியம் செய்ய முடியாது சிம்ம லக்னம் கொண்ட பெண்னை வசியம் செய்ய முடியாது வைஜயந்தி உபாசனை செய்யும் பெண்ணை வசியம் செய்ய முடியாது இத்தகைய பெண்களை தவிர்த்துத்தான் வசியத்தை பிரயோகிக்க முடியும்.

  அதே போல பெண்களும். திருமணமான ஆண்களை வசியம் செய்ய கூடாது குரு ஸ்தானத்தில் இருப்பவரை வசியம் செய்ய கூடாது விரதம் மேற்கொண்டிருப்பவரை வசியம் செய்ய கூடாது (இன்னும் சில நிபந்தனைகள் வருணம், ஜாதி போன்றவை குறித்து சொல்லப்பட்டிருக்கின்றன) காதலில் வெற்றி பெற யட்சினி உபாசனைகளில் பூஜை முறைகளே அதிகம் சொல்லப்பட்டிருக்கின்றன. மனதில் எண்ணியவரையே கணவராக அடைய அமாவாசை கழித்து வரும் மூன்றாம் பிறையன்று துவங்கி மதன மேகலா லக்ன பீடம் வைத்து செவ்வாய் வெள்ளிகிழமைகளில் மந்திர உச்சாடனம் செய்துவர எண்ணிய திருமணம் பலிதமாகும்.
  
  மதன மேகலா என்பது விஸ்ரூப யட்சிணி அதாவது நீர், காற்று, மண் தீ போன்ற இயற்கை சக்தியில் அட்சராம்சம் கொண்டது. மதன மேகலா லக்ன பீடம் ஐந்து அங்குல நீளம் நான்கு அங்குல அகலம் கொண்டது இதன் உள்ளே ரதிமன்மத வசிய சக்ரமும் விவாக பந்தினி சக்ரமும் பதிக்கப்பட்டிருக்கும். (சில இடங்களில் குறிப்பிட்ட ஆடவனின் ஜாதகமும் பந்தனம் செய்யப்படுவதுண்டு) பொதுவாக இந்த உபாசனையை நீரில் நின்றுக்கொண்டு செய்ய வேண்டும் ஆனால் குளியலறையில் குளித்து முடித்தப்பின் ஈர உடலோடு ஆடைஏதும் அணியாமல் கிழக்கு நோக்கி நின்று வலது உள்ளங்கையில் பீடத்தை வைத்து இடது கையால் தாங்கி, ஓம் ஈம் க்லீம் நமோ பகவதி ரதி வித்மயே மஹா மோஹினீ காமேசி மம பந்தம் சித்த பதீம் ஸ்வயம் பூர்வம் பந்தம் வசி குரு குரு ஸ்வாஹா என்ற மந்திரத்தை ஒன்பது முறைகள் சொல்லி உடலில் இருந்து நீரை எடுத்து மூன்று முறை பீடத்தை சுற்றி குறிப்பிட்ட ஆடவனை நினைத்து காற்றில் தெளிக்க வேண்டும். இந்த முறை பல இடங்களில் பரிபூரண வெற்றியை கொடுத்திருக்கிறது.

  இதை தவிர்த்து காதலில் வெற்றி பெற வசிய பொடி அல்லது சொக்கு பொடியை பயன்படுத்துவதாக மலையாள மாந்த்ரீகத்திலும், சித்தர் வழி முறைகளிலும் சொல்லப்படுகின்றன. குறிப்பாக சிதம்பர அஷ்ட கர்மத்தில் கருவூர் சித்தர் பல முறைகளை சொல்லுகின்றார். மலையாள மாந்த்ரீகத்தில் இந்திர கோபம்.மதனகாமபூ, வெண்குன்றி மணி,சுழல் வண்டு, ஈப்புலி, நீர் மேல் நெருப்பு போன்றவற்றை அஷ்ட்டாங்க திராவகம் எனப்படும் குறிப்பிட்ட சில எண்ணைகளை சேர்த்து தயாரிக்கப்படும் களிம்பை மூங்கில் குறுத்தில் காப்பிட்டு வீனாயட்சினி மூலமந்திரத்தை ஒன்பது வேளை 1008 உரு ஏற்றி பெண்ணின் உடல் திரவத்தோடு கலந்து உட்கொள்ள கொடுக்க ஆண்களை வசப்படுத்தமுடியும் என்று சொல்லப்படுகிறது.

  மரமஞ்சள். கஸ்தூரி, தாழம்பூத்தாள், கல்மதம், பாதிரி, வென்கற்கை ஆகியவற்றுடன் குறிப்பிட்ட சில பூஞ்சைகளை குழிதைலத்தில் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி வெங்கார பற்பத்தில் புடம்போட்டு வாகை பலகையில் வைத்து மதன கன்னிகா மூல மந்திரத்தால் உரு ஏற்றி உணவில் கலந்து கொடுத்தாலும், பாற்குரண்டி வேரில் கணமாக பூசி காயவைத்து குறிப்பிட்ட ஆணின் உடமைகளில் வைத்தாலும் உச்சிஸ்ட்ட மதன கன்னிகா அந்த ஆணின் உறக்கத்தில் போய் குறிப்பிட்ட பெண்ணோடு சேர உத்தரவு கொடுக்கும் என்று யட்சிணி வசிய நிகண்டு என்ற நூல் குறிப்பிடுகிறது. எத்தகைய வசிய முறையை பின் பற்றினாலும் முதலில் வசியம் படுத்தும் நபரின் லக்ன பலன், தாரா பலன், பஞ்சக பலன் தெரிந்து அதற்கு தக்கவாறு வசிய முறைகளை பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

  குடும்ப பிரச்சனைகள் தீர.. ..... ..... கணவன் மனைவி இடையே ஏற்படும் மன வேறுபாடுகள், விருப்பமின்மை, தாம்பத்தியத்தில் ஈடுபாடுஇன்மை, வெறுப்பு ஆகியவற்றை எதிர்மறை சக்த்திகளால் ஏற்படுத்தமுடியுமா என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கிறது. விஷ தன்மை வாய்ந்த மூலிகைகளை பயன்படுத்தி மன பாதிப்புகளையும் உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தமுடியும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. வித்வ பிரயோகம் எனப்படும் பூதபிரேத பைசாச பிரயோகங்கள் துர் தேவதைகள் யட்சிணிகள் மற்றும் பிரம்ம ராட்சசர்களைக்கொண்டு செயல் படுத்தப்படுவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் மனோசக்தி யைக்கொண்டு எதிர்மறை பதிவுகளை ஆழ்மனத்தில் ஏற்படுத்துவதன் மூலமாகவே செயல் படுத்தப்படுகின்றன. பொதுவாக கணவன் மனைவிக்குள் பிரச்சனைகளையும் பிரிவினைகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்பவர்கள் மூன்று வழிகளை பயன் படுத்துவதுண்டு.

  சமாதானமாக இருக்கும் கணவன் அல்லது மனைவியை குறிவைத்து அவர்களின் மனத்தை மாற்றி கணவன் அல்லது மனைவியை பற்றிய சிந்தனைகளை மறக்கசெய்வது அல்லது எதிற்மறை சிந்தனைகளை அதிகப்படுத்துவது வித்வேசனம் எனப்படும். ஒற்றுமையாக இருக்கும் கணவன் மனைவிக்கிடையே எதிற்மறையான எண்னங்களை ஏற்படுத்தி தேவையற்ற சந்தேகங்கள், பயங்கள், மற்றும் குழப்பங்கள் அதிகரிக்க செய்வது இதன் அடிப்படையாகும். கணவன் அல்லது மனைவியின் உடல் அணுக்களில் நச்சுத்தண்மையை ஏற்படுத்தி அவர்களுக்குள் தம்பத்திய உறவும் நெருக்கமும் ஏற்படாமல் செய்வது அஸ்ரஸ்வதம் எனப்படும். இதனால் கணவன் மனைவிக்குள் தாம்பத்திய உறவு ஏற்பட்டால் கணவனுக்கோ மனைவிக்கோ உடல் பாதிப்புகள்,சிரமங்கள் மற்றும் சங்கடங்கள் ஏற்பட்டு ஒருவரை விட்டு ஒருவர் விலகும் நிலை ஏற்படும்.
  

           இந்த முறையை பயன்படுத்தும் போது கணவன் மனைவி அல்லது காதலர்களிடையே உடல் நெருக்கம் ஏற்பட்டாலோ,  உடல் ஸ்பரிசம் ஏற்பட்டாலோ, கந்த ஸ்பரிசம் ஏற்பட்டாலோ அவர்களுக்கிடையே எதிற்மறை எண்னங்கள் ஏற்பட்டு வெறுப்பும் பகையும் ஏற்படும். இதனால் உடல் நெருக்கத்தை தவிர்த்து ஒருவரை ஒருவர் விட்டு விலகி செல்லும் நிலை ஏற்படும். அடுத்ததாக கணவன் அல்லது மனைவிக்கிடையில் மன சஞ்சலங்களை ஏற்படுத்தி மூன்றாம் நபரை பிரவேசிக்க செய்வது இது அந்தராசனம் அல்லது அந்தரபிரவேசம் எனப்படும்.  ஒழுக்கமான பெண் அல்லது  ஆணுக்கு வேற்று ஆண் அல்லது பெண்ணோடு தொடர்புகள் அல்லது உறவுகள் ஏற்பட்டு அதனால் குடும்பத்தில் விரிசலும் பிரிவும் ஏற்பட செய்வது.  பொதுவாக எல்லாவித வசியமுறைகளிலும் திலகம்,அஞ்சனம், மசிகந்தம், ஔஷதம், குளிகை என்ற ஐந்து வித மூலிகை பொருட்கள்அதிகம் பயன் படுத்தப்படுகின்றன.


    இதில் திலகம் என்பது நெற்றி அல்லது வகிட்டில் வைக்கப்படும் பொட்டையும், அஞ்சனம் என்பது கண்கள் அல்லது புருவத்தில் பூசப்படும் மையையும், மசிகந்தம் என்பது உடலில் பூசும் வசியபொடியையும், ஔஷதம் என்பது உட்கொள்ளும் மருந்தையும், குளிகை என்பது மருந்து உருண்டைகளையும் குறிக்கும். பாதிப்புகளை ஏற்படுத்தவும் ஏற்பட்ட பாதிப்புகளை தடுக்கவும் என இரண்டு வழிகளுக்கும் இந்த ஐந்து பொருட்க்களும் பயன் படுத்தப்படுகின்றன. ஆண்களை வசியம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் மசிகந்தம் அல்லது ஔஷதம் என்ற இரண்டு வழிகளையே பின்பற்றுகின்றனர்.
  
    சந்தர்ப்ப வசத்தால் நெருக்கமாக பழகும் சூழ்நிலை ஏற்பட்டாலோ உடல் உறவு கொள்ளும் நிலை ஏற்பட்டாலோ மசிகந்தம் முறையில் வசிய மருந்தை உடலில் பூசிக்கொண்டு அந்த ஆனோடு நெருங்கி பழகுகின்றனர். உடலில் பூசப்படும் மூலிகை கலவையின் சக்தி பெண்ணின் ஜீவகாந்த அணுக்கள் மற்றும் மூலிகை கலவையோடு சேர்ந்து ஆணின் வியர்வை துவாரங்கள் வழியாகவும் , உடல் திரவங்கள் வழியாகவும் உடாலுக்குள் ஊடுருவியும், வாசானை நாசி வழியே சுவாசத்தில் கலந்தும் விஷுவல் எனப்படும் காட்சி வடிவிலும்,ஆடிட்டரி எனப்படும் ஒலி வடிவிலும்,கினஸ்தடிக் எனப்படும் உணர்வு வடிவிலும் ஆழ்மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

    இதனால் ஆழ்மனதில் பதிந்த பெண்ணின் தோற்றம், நறுமணம்,செயல் போன்றவை மீண்டும் மீண்டும் அந்த ஆணின் மனதில் ஆதிக்கம் செலுத்துகிறது. இவ்வாறு வசியம் செய்யப்பட்ட ஆண் தனது சுய கட்டுப்பாட்டை இழந்து வசியம் செய்தவர்களின் சிந்தனையிலேயே இருப்பான். அவர்களை தவிர மற்ற அனைத்தும் ஒரு பொருட்டாகவே தெரியாது. வசியத்தை செயல் படுத்தியவர்களை நேரில் பார்த்தாலோ, அவர்களின் குரலை கேட்டாலோ ஒரு வித பயம் அல்லது பதட்டம் ஏற்படும்.


     மற்றவர்களின் கருத்தைவிட வசியத்தை செயல் படுத்தியவர்களின் உத்திரவுக்கு முழுமையாக கட்டுபடுவான். ஔஷதம் எனப்படும் வசிய மருந்துகளை உட்கொள்ள செய்தால் முதலில் உட்கொள்ளுபவர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும். உடலில் தளர்ச்சியும் சோர்வும் அதிகமாகும். வயிற்றில் குத்தல் அல்லது வலி விட்டு விட்டு ஏற்படும், முதுகின் கீழ் புறத்திலும் நடு முதுகிலும் தொடர்ந்து வலி ஏற்படும்.உணவு உட்கொள்ளுவது படிப்படியாக குறையும் நாளடைவில் வசியம் வைத்தவரின் முழு கட்டுப்பாட்டில் அவர்களூக்கு மட்டுமே ஆதரவாக மாறிவிடுவார்கள். உட்கொள்ள கொடுக்கப்படும் மருந்துகள் உடல் திரவங்களை பாதித்து மனத்தின் செயல் இயக்கத்தை மாற்றுவதால் சுய கட்டுபாடு இழந்து ஒரு குறிப்பிட்ட நபரை பற்றிய தொடர் சிந்தனைகள் ஏற்படுகின்றன. இத்தகைய வித்வபிரயோகத்தை செயல்படுத்துபவர்கள் மந்திர யந்திர ஔஷத சக்திகளால் மனமொழி உத்தரவுகளை செலுத்துவதுண்டு.

  இவ்வாறு மந்திர பிரயோகங்களை பயன் படுத்தினால் 90 நாட்களிலும், யந்திர பிரயோகங்களை பயன் படுத்தினால் 60 நாட்களிலும், ஔஷதங்கள் எனப்படும் மருந்துக்களை பயன் படுத்தினால் 30 நாட்களிலும் பாதிப்புகள் ஏற்படும் என்பது பொதுவான கருத்து. மாந்த்ரீக சாஸ்திரத்தில் உபதேவதை வழிபாட்டின் மூலமாகவே இத்தகைய பிரயோகங்கள் செயல் படுத்தப்படுகின்றன. உச்சிஸ்டசன்டாளி, உச்சிஸ்டகாளிகா, பந்தினி, மதனமேகலா, வடயட்சிணி. துமாவதி, சங்கதரணி போன்ற யட்சிணி உபாசனைகளை பயன்படுத்தி வசியம், தம்பனம், மோகனம், வித்வேசனம், மாரணம்,உச்சாடனம் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.



  உதாரணமாக உச்சிஸ்ட்ட சண்டாளி மூல மந்திரத்தை 1008 உரு நாற்பத்தி எட்டு நாட்க்கள் ஜெபம் செய்து மந்திர ஸித்தியானதும். கர்னீகரம்,புன்னாகமலர்,ஜபபுஷ்பம்,பாதிரி, பாற்குறண்டி இவற்றை முதல் முறையாக காய் விடும் தென்னை மரத்தின் இளனீரில் சேர்த்தரைத்து புடம்போட்டு உணவில் கலந்து கொடுத்தால் சத்ரு வசியம் ஸ்த்ரீவசியம் புருஷ வசியம் ஏற்படும் என்று ருத்ர ஸ்யாமளா என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது. நீலி தாரா என்ற யட்சிணி உபாசனையை 1000 இலுப்பை சமித்தில் பசு நெய் கொண்டு ஹோமம் செய்து சந்தனம், கோரோசனை, கஸ்தூரி,புனுகு,கும்குமபூ,வெள்ளாடனை,ஆகியவற்றை அயகாந்த செந்தூரத்துடன் கலந்து மண்சட்டியின் உட்புறத்தில் பூசி ஒன்பது நாட்க்கள் நிழலில் அதன் பின் அரசு சமித்தில் பசு நெய் தடவி தீயிலிட்டு எறித்து அதன் தீயை மன்சட்டியில் காட்டி கரியாக எடுத்து அதோடு எண்ணை கலந்து உலர்த்தி திலகமாக இட்டால் பதி வசியம் ஏற்படும்.

  காமதேவனான மன்மதனின் ஐந்து வித மலர் அம்புகளான தாமரை, மாம்பூ,அசோகம்,முல்லை,நீலோற்பவம் ஆகியவற்றை மசித்து அத்துடன் வெங்காரம் ,மனோசிலை, உத்தரோணிபூஆகியவற்றை மணிக்கு ஒண்றாக கலந்து வேப்பெண்னை தவிர்த்து ஏதாவது ஒரு எண்னையில் கலந்து மூன்று நாட்க்கள் ஊறவைத்து உச்சிஸ்ட பைரவி மூலமந்திரத்தை மூன்றூ வேளை மூன்று நாட்கள் வளர் பிறையில் உரு ஏற்றி உடல் முழுவதும் தேய்த்து மூன்று நாழிகை (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்) உடலில் ஊற விட்டு அதன்பின் ஸ்னானம் செய்தால் மன வேற்றுமையால் பிரிந்த கணவன் மனைவி ஓன்றாக சேர்வார்கள். என்றும்,( மனைவியின் மணம்,ஸ்பரிசம், நெருக்கம் கணவனின் அண்மையில் இருக்க வேண்டும்)

  மேற்படி கலவையை பனை ஓலையில் தேய்த்து மனைவியின் கூந்தல் ரோமம் மூன்றை பந்தனம் செய்து நன்றாக காய வைத்து விருப்பம் இல்லாத கணவனின் படுக்கையில் வைத்தால் அவனுக்கு மனைவிமீது அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். மேற்சொன்ன ஐந்து பூக்களுடன் கன்று ஈனாத பசுவின் கோமியம் ஒரு பலம், சரம் கொன்றை மிளறு, தேவதாரு வேர், இலந்தை வேர்,வெண்டை வேர், வெம்பலி (வெள்ளை கொள்ளுகாடை வேர்) ஆகியவற்றை கலந்து மண்கலயத்தில் வைத்து காலை நேரத்து சூரிய ஒளியில் சூடாக்கி உடலில் தேய்த்து மூன்று நாழிகை கழித்து ஆணுடன் உறவு கொண்டால் அந்த ஆண் எந்த காலத்திலும் அந்த பெண்ணை விட்டு விலக மாட்டான். என்றும் பைரவி தந்த்ரம் என்ற நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. இத்தகைய மருந்து கலவைகளை பெண்கள் தங்கள் கணவனிடம் பயன் படுத்தினால் அது அவர்களின் குடும்ப வாழ்வில் அதிக நெருக்கத்தையும் இன்பத்தையும் தரும்.

 ஆனால் துரதிருஷ்டவசமாக சில பெண்கள் தங்களுக்கு பிடித்தமான அல்லது உதவிகரமான அல்லது வசதியான, திருமணமான ஆண்களிடம் பயன் படுத்தும் போது அது அந்த ஆடவனின் குடும்ப வாழ்வில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. அவ்வாறு தவறாக பயன்படுத்தி ஆண்களின் மனதை மற்றும் முயற்சிகளை தடுக்கவும் நமது பாரம்பர்ய சாஸ்திரங்கள் வழிகளை சொல்லி இருக்கின்றன. பெண்கள் தங்களுக்கு வேறு யாராவது எதிர்மறை பிரயோகங்களை செலுத்திவிடுவார்கள் என்ற பயம் இருந்தாலோ, எதிர்மறை பிரயோகங்களால் தன் கணவனின் உயிருக்கோ ஆரோக்கியத்திற்க்கோ பாதிப்பு ஏற்படும் என்ற பயம் இருந்தாலோ வைஜயந்தி யந்திரம் என்னும் அஸ்வரூட ரக்ஷையை வெள்ளி கிழமையும் பஞ்சமி திதியும் சேர்ந்து வரும் நாளில் மாங்கல்யத்தில் கோர்த்து அணிவது பாதுகாப்பை தரும்.

  அஷ்வரூடா என்பவள் பராசக்தியின் பாஸ பானத்தில் இருந்து தோன்றியவள். கணவன் மனைவி ஒற்றுமைக்கும், குடும்ப அமைதிக்கும் உரிய தெய்வமாக தேவி மஹாத்மியம் சொல்கிறது. ரக்ஷையில் இருக்கும் அஸ்வரூடா யந்திரம் கணவன் மனைவிக்கிடையே ஜென்ம பந்தம் எனப்படும் மன இணைப்பை அதிக படுத்துவதுடன், பகளாமுகி யந்திரம் கணவன் மனைவி ஒர்ருமையான திருமண பந்தத்திற்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டது. ஔஷதம் எனப்படும் மருந்துகள் கொடுக்கப் பட்டிருந்தால் என்ன வகையான மருந்துகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து அவற்றை செயல் இழக்க செய்யும் எதிருரை மருந்துகளை ஸ்ரீதேவி கார்த்யாயணி மந்திர பிரயோகத்தால் ஒன்பது வேளைகள் உரு ஏற்றி தேய் பிறை நாட்களில் உட்கொண்டால் செலுத்தப்பட்ட விஷம் உடல் கழிவுகள் வழியாக வெளியேரும். எதிர் மறை சக்திகளால் குடும்பதலைவனின் பொறுப்பின்மை அதிகரித்தாலோ, குடும்பத்தில் குழப்பங்களும் அமைதியின்மையும் நிலவினாலும் கார்த்யாயனி யந்திர பீடத்தை வீட்டில் வைத்து வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் பூஜித்து வந்தால் அனைத்து வித ஸாகினி, டாகினி,மோகினி,பில்லி, சூனியம்,வைப்பு,ஏவல் முதலிய துஷ்ட சக்திகளின் பாதிப்புகளை தடுத்து நீக்கிவிடும்.